உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்: வெளியான அறிவிப்பு
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சப்ரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாத்திரை காலம் நிறைவடைந்த பின் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு
அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் விசாகப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri