உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்: வெளியான அறிவிப்பு
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சப்ரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாத்திரை காலம் நிறைவடைந்த பின் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு
அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் விசாகப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri