சுற்றுலா வந்த பிரிட்டன் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியப் பெண் ஒருவர் கொள்வனவு செய்த தங்கம் திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லின்டா பிரவுன்மன் என்ற 75 வயதுடைய பிரித்தானியப் பெண்ணொருவரே நேற்று (30.01.2023) இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பெண் களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
இவர் அளுத்கம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றில் சென்று தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 18,500 பவுண்டுகள் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,