பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் நிலை சாதகமாக இல்லை! உபுல் ரோஹண
பயணக் கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே 14ம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது பொருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணக் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான மக்கள் தினமும் வீடுகளை விட்டு வெளியேறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
