எரிபொருளுக்கு பெப்ரவரியில் ஏற்பட போகும் நிலைமை
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் ஒரு பெரல் கச்சாய் (Crude oil) எண்ணெயின் விலை 100 டொலர்களை நெருங்கும் என எரிபொருள் சம்பந்தமான பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிர் காரணமாக அந்நாடுகளில் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக அமையும் என அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் ஒரு பெரல் கச்சாய் எண்ணெயின் விலை 87 டொலர்களாக அதிகரித்தது. இது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகளவான விலை உயர்வு எனக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்தால், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கை கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பொருளாதாரத்திற்கு இந்த நிலைமையால் பாதிப்பு ஏற்படும். இவ்வாறான நிலைமையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை அதிகரிக்காது போனால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam