கிழக்கு மாகாண ஆளுநரை நிலை தடுமாற வைத்த சிறிநாத் எம்.பி!
மக்களின் பிரதிநிதிகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,'' மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மாவட்டத்திற்கு ஆரோக்கியமான விடயமல்ல.
மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் திட்டங்களை உருவாக்கி அவை தற்காலிக அனுமதிக்காக உரிய அதிகாரிகளிடம் அனுப்பப்படுகின்றன.
அந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் அந்த திட்டங்கள் எந்த அடிப்படையில்,எந்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கபடுகின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
காரணம் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் எந்த கட்சி சார்ந்தும் அரசியல் சார்ந்தும் இருக்க கூடாது.''என கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் பல முக்கிய விடயங்கள் சார்ந்து காரசாரமாக பேசியவற்றை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,