மிகப்பெரிய தாக்குதல் திட்டம்! ராபா மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ராபா(Rafah) நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பேர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாத தொடக்கத்தில் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், ராபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிகப்பெரிய தாக்குதல்
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம், ராபா நகரில் இஸ்ரேல் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நிகழ்த்தியது.
இந்நிலையில், இன்று ரமழான் பண்டிகை தினத்தில் ரபா நகர மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளமை அரபு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
