மோடியின் வருகைக்கு முன் இலங்கைக்குள் நுழையும் விசேட புலனாய்வுத் துறை
ஏப்ரல் 4 ஆம் திகதி மோடி இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
மோடியின் வருகையின் பின்னர் ஏனைய நாட்டு தலைவர்களும் இலங்கைக்கு வருகை தர இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவது எமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி எனவும் ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட "இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டாண்மை தொலைநோக்குப் பார்வையை" வலுப்படுத்த இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடியின் வருகைக்கு முன் இலங்கைக்குள் நுழையும் விசேட புலனாய்வுத் துறை குறித்து பல தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
