இதுவரை இலங்கைக்கு கிடைத்துள்ள சினோபார்ம் தடுப்பூசிகள்
இலங்கைக்கு இதுவரை 51 லட்சம் சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
இன்று ஜூலை 04 ஆம் திகதியும் இலங்கைக்கு 10லட்சம் சினோபார்ம் குப்பிகள் எடுத்து வரப்பட்டதாக மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
பீய்ஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் இந்த 10 லட்சம் குப்பிகள், நான்காவது தொகுதியாக எடுத்துவரப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 600,000 தடுப்பூசி குப்பிகள் வந்ததிலிருந்து இலங்கை இதுவரை மொத்தம் 51 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது.
சைனோபார்ம் தடுப்பூசி, பிபிஐபிபி-கோர் வி (BBIBP)-corV) என்றும் அழைக்கப்படுகிறது, இது சீனா தேசிய பயோடெக் குழுவினால் தயாரிக்கப்படுகிறது. இது சீனாவின் தேசிய மருந்துக் குழு கழகத்தின் துணை நிறுவனமாகும்.