நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
கொழும்பிலிருந்து - இந்தியாவின் மும்பைக்குச் சென்று கொண்டிருந்த MV Wan Hai 503 என்ற கப்பலில் திங்கள்கிழமை(09.06.2025) ஒரு கொள்கலன் வெடித்ததாகவும், இதன் விளைவாக கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த பதினெட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கடற்படை
இந்நிலையில் மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூரும் ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) கேரள கடற்கரை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 10, 2025
இந்நிலையில் நேற்று பெறப்பட்ட காணொளி காட்சிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது MV Wan Hai 503 என்ற கப்பலில் இருந்து அதிக புகை வெளியேறுவதைக் காட்டியுள்ளது.
கப்பலில் தீ மற்றும் வெடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை
திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, கப்பலின் 22 பணியாளர்களில் 18 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் சிலர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Quick response by @IndiaCoastGuard after explosion on #Singapore flagged MV #WANHAI503, 130 NM NW of #Kerala coast.
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 9, 2025
➡️ #ICG aircraft assessed the scene & dropped air-droppable
➡️ 04 #ICG ships diverted for rescue.#MaritimeSafety #ICG #SearchAndRescue pic.twitter.com/xVPEShbU8h
சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையகம் (MPA) நான்கு பணியாளர்கள் இன்னும் காணவில்லை என்று கூறியுள்ளது.
அவர்களில் இருவர் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் மியான்மர் மற்றும் இந்தோனேசிய நாட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து 50 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன்கள் கேரள கடற்கரையில் மிதந்து கொண்டிருந்ததாகவும், அடுத்த மூன்று நாட்களில் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
