இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கனடாவில் எதிர்ப்பு போராட்டம்
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கனடாவில் எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனடாவிற்கான இந்திய தூதரகத்திற்கு எதிரில் கனடா வாழ் இந்திய சீக்கியர்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சீக்கிய மதத் தலைவரான ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் இணைந்த நூற்றுக்கணக்கானோர்
இந்திய அரசாங்கம் இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே நூற்றுக்கணக்கானோர் இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்திய தேசிய கொடி எரிக்கப்பட்டதுடன், பிரதமர் நரேந்திரா மோடியின் உருவப்படம் மீது செருப்புக்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |