வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி மன்னாரில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (20) மன்னார் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
பொய் வாக்குறுதிகள்
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை.
அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.
இவ்வாறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றமையால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் குறித்த கையெழுத்துப் போராட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
