Shut up Trump..! AI காணொளியொன்றின் மூலம் ட்ரம்பை கேலி செய்துள்ள ஈரான்- வெளியான காணொளி
தீவிரமான மற்றும் பதற்றமான அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்த சூழலுக்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரானியர்கள் செயற்கை நுண்ணறிவால்(AI) உருவாக்கிய காணொளிகள் மூலம் தொடர்ந்து நகைச்சுவை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், ஐதராபாதில் உள்ள ஈரான் தூதரகம், ட்ரம்ப் மற்றும் சமீபத்திய போர்நிறுத்த நீட்டிப்பு முடிவை கிண்டல் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு காணொளியை தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பகிர்ந்துள்ளது.
AI காணொளி
அந்த பதிவில், போர்நிறுத்தம் எப்படி நீட்டிக்கப்பட்டது? இந்த காணொளி ஈரானில் வைரலாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
45 விநாடிகள் கொண்ட அந்த காணொளியில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ட்ரம்ப், துணை ஜனாதிபதி JD வான்ஸ் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேசையில் காத்திருப்பது போல காட்டப்படுகிறது.
How was the ceasefire extended?
— Iran In Hyderabad (@IraninHyderabad) April 22, 2026
The video is getting viral in Iran. pic.twitter.com/UCldpWjZMO
காணொளியில், ட்ரம்ப், நாங்கள் ஈரானுடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று தனது Truth Social பதிவில் எழுதுவது போலவும் காட்டப்படுகிறது.
பின்னர் SpongeBob SquarePants மீம் போல “2000 ஆண்டுகள் கழித்து” என்ற காட்சியில், ட்ரம்ப் ஈரானிய பிரதிநிதிகள் வராததால் கோபமடைவது போல AI காட்சி இடம்பெறுகிறது.
ஈரானுடன் போர்நிறுத்தம்
அதன்பின், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், நாங்கள் தாக்குவோம்” என்று AI ட்ரம்ப் கூறுவது போலவும், பின்னர் ஈரானியர்கள் எங்கே? என கேட்பது போலவும் காட்டப்படுகிறது.
ஒரு உதவியாளர் அளிக்கும் குறிப்பில் Shut up, Trump என்று எழுதப்பட்டிருப்பதும் காணொளியில், இடம்பெறுகிறது.

காணொளியின் இறுதியில், ட்ரம்ப் சரி, பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன் என்று கூறி அறையை விட்டு வெளியேறுவது போல காட்சியளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், உண்மையில் ட்ரம்ப், பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானுடன் போர்நிறுத்தத்தை நீட்டித்ததாகவும், பேச்சுவார்த்தைக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் தரப்பில், பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நல்ல நம்பிக்கையுடன் நடக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.