தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன்
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிதினத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சீறீதரன் சபையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
இன்றையதினம், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்டோருக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன், 50 வருடங்களுக்கு முன்னர் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களையும் இந்த சமயத்தில் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
