தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணயின் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட மார்பெலும்பு காயம் காரணமாக உள்இரத்தக் கசிவு ஏற்பட்டதால் இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரியை ஆட்டமிழக்கச் சயெ்ய அபாரமான பிடியெடுப்பு ஒன்றை எடுத்த போது, மார்புப் பகுதியில் கடுமையாக காயமடைந்தார்.
இரத்தக்கசிவு காரணமாக
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சபை் பிரிவில் உள்ளார்.

உள்இரத்தக் கசிவு ஆரம்பமானதால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டியிருந்தது. இரத்தக்கசிவு காரணமாக தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதான ஷ்ரேயாஸ் அய்யர், மேலும் ஒரு வாரம் சிட்னி மருத்துவமனையில் தங்கியிருந்து, பின்னர் இந்தியாவிற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri