கிளிநொச்சியில் அரச அதிகாரிகளால் சிரமதான பணி முன்னெடுப்பு
கிளிநொச்சியில் (Kilinochchi) வடக்கு மாகாண பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொலிஸார், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதான பணியானது, இன்றைய தினம் (27.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து இரு பகுதியாக பிரிந்து, ஒரு பிரிவு கரடிப் போக்கு வரையும் மற்றைய பிரிவு இரணைமடு சந்தி வரையும் சிரமதான பணியை முன்னெடுத்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர்
இதில், பொலிஸ் இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |