தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன்! ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன்: தம்மிக்க பெரேரா சூளுரை
"இலங்கையில் போர்க் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீர்க்க முடியும். அதனைச் செய்து காட்டுவேன்" என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நேற்று(24) பதவியேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதுதான் கப்பலில் ஏறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது வேலையை காட்டுவேன். நாட்டுக்கு நிச்சயம் முதலீடுகளைக் கொண்டு வருவேன். அதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
போர் காலம்

மேலும் வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் கடவுச்சீட்டை ஒரு நாளில் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போர் காலத்தில் இவரே இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்காது: ராஜித |
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan