மின் தடை தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இது குறித்து அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்நிலையம் மற்றும் கொழும்பு துறை மின்சார நிலையங்களுக்கு சுமார் 2500 மெற்றிக்தொன் உலை எண்ணெய்யை விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கிமையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மின்சாரசபை பெருந்தொகையான நிலுவைக் கொடுப்பனவையும் செலுத்தவேண்டியுள்ள நிலையிலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலை எண்ணெய்யை விநியோகிக்க இணங்கியுள்ளது.
எனினும் இந்த உலை எண்ணெய் விநியோகம் இடம்பெறாதவிடத்து, நாட்டில் இரண்டரை மணித்தியால மின்சார விநியோகத் தடை மேற்கொள்ளப்படலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த பரிந்துரையை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அனுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam