நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் அண்மைக்காலமாக மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் சில பகுதிகளுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரு கட்டங்களாக இந்த துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலயம் E மற்றும் F ஆகிய பகுதிகளுக்குக் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
வலயம் P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்குக் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு திடீர் மின்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.