யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தற்போது அதி தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குருதிக்கொடை
இந்த நிலையிலேயே, தற்போது தட்டுப்பாடு மேலும் தீவிரமாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, 'ஓ பொசிடிவ்' வகை குருதி உடையவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




