மருந்துகளுக்கு பற்றாக்குறை! - ஜே.வி.பி வெளிப்படுத்திய தகவல்
கோவிட் தொடர்பான சுவாச நோய்கள் மற்றும் பிற சிக்கல்கள் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி இன்று வெளிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
சில நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சுவாச நோய்கள் மற்றும் பிற சிக்கல்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் குறுகிய காலத்துக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன.
கோவிட் தொடர்புடைய பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலும் பற்றாக்குறை உள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தனது கவனத்தை அவசரமாக செலுத்த வேண்டும் என்று நலிந்த ஜெயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
