வவுனியாவில் கடையொன்றின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் கடையின் முன்வாசல் கதவை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வியாபார நிலையத்தின் உரிமையாளர் தெரிவிப்பதுடன், குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.