ஜேர்மனியில் இஸ்ரேல் தூதரகம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம்
ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள அருங்காட்சியகம் அருகே செயல்படும் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த முயன்றுள்ளனர்.
இதன்போது அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக பொலிஸார் அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
52-ஆவது ஆண்டு தினம்
இது குறித்து பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் கூறியதாவது, முனிச் நகரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞர் பொலிஸாரை நோக்கி சுட்டார். அதையடுத்து, பொலிஸார் திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினரும் சுட்டுக் கொல்லப்பட்ட 52-ஆவது ஆண்டு தினத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அந்த இளைஞர் துப்பாக்கியுடன் அங்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் ஜோவாசிம் ஹொமன் கூறுகையில், 'இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே ஒருவர் காரை நிறுத்துகிறார்; பிறகு துப்பாக்கியால் சுடுகிறார் என்றால் அது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
