வன்னித் தேர்தல் தொகுதியில் ரணிலின் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (06.09.2024) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நடவடிக்கைகள்
ஜனாதிபதி தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்க வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டதுடன், பொறுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இராஜாங்க அமைச்சர்களான கே.கே.மஸ்தான், சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
