அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு-உலக செய்திகள்
அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சிகாகோவின் வடக்கு கரையில் சுமார் 30,000 பேர் வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(04) இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 246 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற அணிவகுப்பில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஆரம்பமான 10 நிமிடத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதன்போது 25 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,