மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
வடக்கு மெக்சிகோவில் மர்மநபர்களால் விருந்து நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது வடக்கு மெக்சிகோவிலுள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பலியானவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு பேரும், காயம் அடைந்தவர்களில் 5 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
பொலிஸ் தேடுதல்
இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பொலிஸார் தேடி வருவதோடு, சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
