கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் வடகிழக்கு கல்கரி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோரல் ஸ்பிரிங்ஸ் வட்டம் N.E. பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கனேடிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு இரண்டு ஆண்கள் ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
இருவரும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் வசிக்கும் இருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுவரை சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
