டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த அடி! உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய பலம் வாய்ந்த நாடுகள்
உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
உதவி தொகை
உதவியாக வழங்கப்பட்ட 5,000 கோடியில் 3,500 கோடி ரூபாவை பிரித்தானியா வழங்கியதாக கூறப்படுகின்றது.
எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நோர்வே வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்பின் முயற்சி
மூன்று வருடங்களை கடந்தும் தொடர்ந்து வரும் உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவிகளை பிரித்தானியா தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 21 மணி நேரம் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் Cineulagam

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan
