கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு - சந்தேகநபரை கண்டுபிடிக்க விசாரணை
இரத்தினபுரி - இங்கிரிய வீதியின் கிரியெல்ல பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள்
துப்பாக்கிச்சூடு கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஒருவர் காயமடைந்து இரத்தினபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணையில், கிரியெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் ஒரு சந்தேகநபரை கிரியல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடங்கியுள்ளன.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam