இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சில காரணங்களால் வளர்க்க விரும்பாத அல்லது வளர்க்க முடியாத மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், குழந்தைகளை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை
அவ்வாறு குழந்தைகளை வைத்து செல்வதற்காக அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மாகாண நன்னடத்தை திணைக்களங்களின் மேற்பார்வையில் 379 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் அறைகளை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எந்தவொரு இடத்திலும் கைவிடப்பட்ட அல்லது திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளுக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் தேவையான பராமரிப்பு வழங்கப்படுகிறது.
சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரங்களை வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.
கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
