இலங்கை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின்; பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையில் பாலியல் வன்கொடுமை அதிகமாக பதிவான குற்றமாக உள்ளது என்றும், 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் 2,252 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, வீட்டு வன்முறை
இவற்றில் பெரும்பாலானவை வீட்டு வளாகங்களில் இடம்பெற்றவையாகும்.(1,420;), அதைத் தொடர்ந்து பொது போக்குவரத்து (261), இணையத்தளங்கள் (192), சாலைகள் (117), பணியிடங்கள் (41), பாடசாலைகள் மற்றும் வகுப்புகள் (20), மத இடங்கள் (9;) மற்றும் பிற இடங்கள் (192) என்ற அளவில் இந்த குற்றங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் கூடுதலாக, வீட்டு வன்முறை ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது,
இது தொடர்பில் ஆண்டுதோறும் 130,000 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri