அரச பாடசாலைகளை புறக்கணிக்கும் பெற்றோர்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் இவ்வருடம் குறைந்துள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பின் முன்னணி பாடசாலையொன்றில் கடந்த ஆண்டு 1500 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 500 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹொரணை பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கல்விமுறை
பெரும்பாலான பிள்ளைகளை தனியார் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முயற்சிப்பதாகவும், இந்நாட்டு கல்விமுறையில் பெற்றோருக்கு நம்பிக்கை இல்லாமையே இந்த நிலைக்கு காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் கல்வி முறையுடன் சிந்தனைப் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், அது இல்லாமல் அந்த முறையை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
