சக ஊழியரினால் பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடுமை
கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய மருத்துவமனையில், அம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
பிராந்திய மருத்துவமனையிலிருந்து கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு குறித்த சுகாதார ஊழியர் அம்புலன்ஸில் வந்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
மருத்துவமனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பாழடைந்த இடத்தில் வைத்து, பெண் சுகாதார ஊழியரை, ஓட்டுநர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் ஓட்டுநரின் அச்சுறுத்தல் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண் சுகாதார ஊழியர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய தங்கிய போதும், முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டபோது தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




