நாடளாவிய ரீதியில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்
சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று(15.02.2026) கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு - கல்லடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற கொன்றை மரத்தில் நேத்தி கடன்களை கட்டி, வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
விசேட வழிபாடுகள்
அத்துடன், தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருட்களை வைத்தே வழிபாடுகள், ஆகம முறைப்படி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு - கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள் பெற்று சென்றுள்ளனர்.


தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan