அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு குறித்து வெளியான புதிய தகவல்
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட அண்மைய “மூட் ஒப் த நேஷன்” (Mood of the Nation) கருத்துக்கணிப்பில் அரசின் அனுமதி விகிதம் 65% ஆக பதிவாகியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு வெரிட்டே ரிசர்ச் Verité Research நிறுவனத்தால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

±3 சதவீத பிழை வரம்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கடந்த ஆண்டு (2025 பிப்ரவரி) 62% ஆக இருந்த அனுமதி விகிதத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை 65% என பதிவாகி இருப்பது புள்ளி விபரவியல் ரீதியாக நிலைத்தன்மையை காட்டுகிறது.
அதேவேளை, அரசை நிராகரிக்கும் விகிதமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்கிறது.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கருத்துக்கணிப்பு வரலாற்றில் முதல் முறையாக, “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை நல்லது அல்லது மிகச் சிறந்தது” என மதிப்பிட்டவர்களின் விகிதம், “மோசமானது” எனக் குறிப்பிட்டவர்களை விட அதிகரித்துள்ளது.
பொருளாதார முன்னேற்றம் குறித்து நம்பிக்கை கொண்டோரின் விகிதமும் உயர்ந்துள்ளது.
“பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது” என கூறியோர் விகிதம் கடந்த ஆண்டு 55% இருந்த நிலையில், இம்முறை 64% ஆக உயர்ந்துள்ளது. “மேலும் மோசமாகிறது” என கூறியோரின் விகிதம் பெரிதாக மாற்றமின்றி உள்ளது.
கருத்து தெரிவிக்காதோரின் எண்ணிக்கை குறைந்திருப்பது, மக்கள் நாட்டின் பொருளாதார திசை குறித்து அதிக நம்பிக்கையுடனும் தெளிவுடனும் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அனைத்து உணர்வுகளும் “பொருளாதார நம்பிக்கை குறியீடு” (Economic Confidence Index) எனப்படும் -100 முதல் +100 வரை அளவிடப்படும் குறியீட்டில் தொகுக்கப்படுகின்றன.
இம்முறை அந்தக் குறியீடு +36 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது +14 ஆக இருந்தது.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 50% ஐத் தாண்டி திருப்தி அளவு உயர்ந்தது இது முதல்முறையாகும். அரசை முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்தபோது, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை குறைப்பதில் அரசுக்கு அதிகமான நேர்மறை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இது ஊழலைக் குறைப்பதை விட கூடுதல் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அண்மைய கருத்துக்கணிப்பு 2026 ஜனவரி 24 முதல் பெப்ரவரி 3 வரை நடத்தப்பட்டது.
தனித்தனி குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,048 இலங்கை வயது வந்தவர்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான, பல கட்ட சீரற்ற மாதிரி தேர்வின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 95% நம்பகத்தன்மை மட்டத்தில் ±3.0 சதவீத அதிகபட்ச பிழை வரம்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam