சிவனொளிப்பாதம் புனிதத்தல யாத்திரை ஆரம்பம்
சிவனொளிப்பாதம் அல்லது சிவனடிபாதம் அல்லது சிங்களவர்களால் ஸ்ரீபாத என்றழைக்கப்படும் புனிதத்தல யாத்திரை எதிர்வரும் புதன்கிழமை, பூரணைத்தினத்தன்று ஆரம்பமாகிறது.
இது 2023 மே மாதம் பூரணை தினம் வரை நீடிக்கும்.
யாத்திரை
இதனை முன்னிட்டு, புனித திருமஞ்சனம், திருவுருவங்கள் மற்றும் சிலைகள் அடங்கிய வாகனப் பேரணி பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீபாத ரஜமஹா விஹாரையில் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (6) புறப்பட்டவுள்ளது.
அன்று மாலை நல்லதண்ணியை வந்தடைந்து, உந்துவப் பூரணைத் தினத்தன்று அதிகாலை அங்கிருந்து ஊர்வலமாக சிவனொளிப்பாத மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கை
மேலும் மூன்று ஊர்வலங்கள் எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ பாதைகள் ஊடாக வந்து ஹட்டன் பாதையில் இணையவுள்ளன.
இந்தநிலையில் யாத்திரையை முன்னிட்டு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட
செயலாளர்கள் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர், அரச நிறுவனங்களின் உதவியுடன்
யாத்திரிகர்களுக்கு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
