சிவனொளிப்பாதம் புனிதத்தல யாத்திரை ஆரம்பம்
சிவனொளிப்பாதம் அல்லது சிவனடிபாதம் அல்லது சிங்களவர்களால் ஸ்ரீபாத என்றழைக்கப்படும் புனிதத்தல யாத்திரை எதிர்வரும் புதன்கிழமை, பூரணைத்தினத்தன்று ஆரம்பமாகிறது.
இது 2023 மே மாதம் பூரணை தினம் வரை நீடிக்கும்.
யாத்திரை

இதனை முன்னிட்டு, புனித திருமஞ்சனம், திருவுருவங்கள் மற்றும் சிலைகள் அடங்கிய வாகனப் பேரணி பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீபாத ரஜமஹா விஹாரையில் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (6) புறப்பட்டவுள்ளது.
அன்று மாலை நல்லதண்ணியை வந்தடைந்து, உந்துவப் பூரணைத் தினத்தன்று அதிகாலை அங்கிருந்து ஊர்வலமாக சிவனொளிப்பாத மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கை

மேலும் மூன்று ஊர்வலங்கள் எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ பாதைகள் ஊடாக வந்து ஹட்டன் பாதையில் இணையவுள்ளன.
இந்தநிலையில் யாத்திரையை முன்னிட்டு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட
செயலாளர்கள் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர், அரச நிறுவனங்களின் உதவியுடன்
யாத்திரிகர்களுக்கு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam