ஷிரந்தி ராஜபக்சவை எச்சரித்த நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டின் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(27) நடைபெற்றது.
இரு வாரங்கள் அவகாசம்
இதன்போது பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை வருமாறு:- "முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரே ஷிரந்தி ராஜபக்ச. அவர் இந்நாட்டில் முதல் பெண்மணியாக இருந்தவர்.சிறார் பாடசாலையை வழிநடத்துபவர்.
எனவே, உரிய வகையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. அவர் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam