சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மாவின் வழிகாட்டலின் பேரில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 28 படை அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ரத்தாகின்றது என்பதனால் அதற்கு முன் இந்த தடை
விதிக்கப்பட வேண்டுமென பிரித்தானிய
நாடாளுமன்றின் ஒரு தொகுதியினர் கோரிக்கை முன்வைத்துள்ளதாக சிங்கள நாளிதழ்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.




