சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர் பலகை அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்து அழிப்பு (video)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அடையாளம் தெரியாத விசமிகளால் நேற்றிரவு கிழித்து செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு காரியாலயம் கடந்த 2 வருடங்களாக அமைக்கப்பட்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு காரியாலயம் பூட்டப்பட்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் தாங்கிய காரியாலய சந்திப்பு திகதியிடப்பட்ட பெயர்பலகையில் ஒட்டப்பட்டிருந்த பெனரை அடையாளம் தெரியாத விசமிகள் கிழித்து எடுத்துச்சென்றுள்ளதாக காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam