சுதந்திரமாக சுற்றித்திரியும் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள்- சாணக்கியன் கண்டனம்(Photos)
மக்களுடைய இரத்தத்தினூடாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மட்டக்களப்பு-மாமாங்கம் சதாசகாய மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டு தாக்குதலின்போது சதி செய்து கொள்ளப்பட்ட அப்பாவி ஜனங்களுக்கு நீதி வேண்டும் என நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அரசியல் இலாபம்
நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியாக நான்காவது வருடமாக இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வருகின்றோம்.
ஒருபுறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் இது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என பலரும் இன்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
கடவுளினுடைய நீதி இந்த இரத்தம், படுகொலையின் ஊடாக அதிகாரத்துக்கு வந்தவர்கள் கடவுளுடைய நீதியால் இந்த நாட்டை விட்டு தப்பியோடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர்களுக்கு நேரடியாக இன்னும் தண்டனை கிடைக்கவில்லை. இதிலும் பிரதான சூத்திரதாரி யார் என்பது பற்றி பலரும் பொது வழியிலேயே பேசினாலும் கூட உறுதியாக தெளிவுப்படுத்தப்படவில்லை.
சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்
ஐ.நாவில் அசாத் மௌலானா எனப்படும் ஒரு நபர் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பின்னால் பசில் ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தற்பொழுது ராஜங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் தொடர்பிலே இருந்ததாக கூறியிருந்தார்.
குற்றவாளிகள் தற்போது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் உறவுகள், குழந்தைகளை இழந்தவர்கள் இன்றும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் அரசியல் செய்தவர்களுக்கு ஒரு காலமும் தண்டனை கிடைக்காது என பலர் சொன்னாலும் கூட அந்த தண்டனை கிடைக்கும் வரைக்கும் நாங்கள் ஒரு கட்சியாக போராடுவோம்.
இந்த பிள்ளைகளை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களை பல வடிவங்களில் முன்னேடுப்போம். இதை நாங்கள் விட மாட்டோம் நாங்கள் மறக்கவும் மாட்டோம்.இது கிறிஸ்தவ மக்களுக்காக மட்டுமான பிரச்சினை அல்ல எங்களுடைய தமிழ் உறவுகள், அனைவருக்குமானது என தெரிவித்துள்ளார்.
மேலும்
இந்நிகழ்வில் முன்னாள் மாநகர சபை
முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
உதயகுமார், அருட்தந்தை யோசப் மேரி, இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள்
மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
