கோட்டாபய ஆட்சியில் எழுந்த குற்றச்சாட்டுக்கள்: அநுரவிடம் தமிழரசு கட்சி முன்வைக்கும் கோரிக்கை

Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Shanakiyan Rasamanickam
By Kumar Dec 26, 2024 03:17 AM GMT
Report

கோட்டாபய (Gotabaya) அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Shanakiyan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்

முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்

கவனயீர்ப்பு ஊர்வலம்

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றுள்ளது.

 

அதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த சாணக்கியன், "கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையினையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான், கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்.

பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை சொல்லியிருந்தார். அது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சியொன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுக்க முயற்சித்தாரா! அளிக்கப்பட்ட விளக்கம்

முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுக்க முயற்சித்தாரா! அளிக்கப்பட்ட விளக்கம்

பிள்ளையான் விடுதலை

அதில் பிள்ளையானை விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு சிலரை இடமாற்றினார்கள் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டது. அன்று நீதி அமைச்சராகயிருந்த அலிசப்ரியின் வழிகாட்டலில் தான் இது நடைபெற்றது என்று சொல்லப்பட்டது.

பிள்ளையானை விடுதலை செய்ததன் காரணமாக கோட்டாபய ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. 

ஆனால், இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய்வதாகவும் அந்த விசாரணைபட்டியலில் ஜோசப்பரராஜசிங்கத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கையின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

கோட்டாபய ஆட்சியில் எழுந்த குற்றச்சாட்டுக்கள்: அநுரவிடம் தமிழரசு கட்சி முன்வைக்கும் கோரிக்கை | Shanakiyan Requested Inquire Gota Time Accusations

மேலும், குற்றப்புலனாய்வு துறையானது பிள்ளையானை விடுதலை செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் உள்ளார்கள்.

அவர்களை மீண்டும் விசாரணை செய்து ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு மாத்திரமல்லாமல் வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டும்” என கோரியுள்ளார். 

கடந்த 24 மணிநேரத்தில் வீதி சட்டங்களை மீறிய ஆயிரக்கணக்கானோர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் வீதி சட்டங்களை மீறிய ஆயிரக்கணக்கானோர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US