பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு
பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தற்காலிக தீர்வு
வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு தற்காலிக தீர்வு வழங்குவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தமது சங்கம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புற்று நோய், தொற்றா நோய், வலி நிவாரணி, மயக்க மருந்து உள்ளிட்ட சுமார் 160 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட கால திட்டங்கள்
இந்த மருந்துப் பொருட்கள் அனைத்து களஞ்சியசாலைகளில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்துப் பொருட்கள் தொடர்பில் நீண்ட கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து மருந்துப் பொருள் உதவிகள் கிடைக்கப் பெற்றாலும், நீண்ட கால அடிப்படையில் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டொக்டர் ஹரித அலுத்கே தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri