வடக்கு கிழக்கு பகுதியில் ஆபத்தாக மாறும் பெரும் புயல்
கடந்த 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் புயலாக உருமாற வாய்ப்புள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகள் மேலும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கு இடைப்பட்ட பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையம் காணப்படுகின்றது.
இது புயலாக மாறினால் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கின் 5 மாவட்டங்களிலும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை இன்று நண்பகல் வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.
அத்துடன், இந்த தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்த பின்னர் கடற்கரையோரங்களில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 33 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
