பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பலருக்கும் இடமாற்றம்
நாட்டின் முக்கிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலருக்கும் திடீர் இடமாற்றமொன்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரையின் கீழ் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 28 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தாங்கள் பதவி வகித்த இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
அவர்களில் முக்கியமான பொலிஸ் மனித உரிமைகள் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எச்.ஜீ.எஸ்.பீ.கே.சந்திரசிறி, ருவன்வெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அபேநாயக்க, கிரிபத்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தென்னிலங்கையில் கடமையாற்றியவர்கள் வடபகுதிக்கும், கிழக்கில் கடமையாற்றியவர்கள் மேல் மாகாணத்தை அண்டிய பகுதிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 20 மணி நேரம் முன்

வரி விதிப்பு மிரட்டலை அடுத்து... அமெரிக்க-கனடா எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் கைவைக்கும் ட்ரம்ப் News Lankasri

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

இனியா விஷயத்தில் கோபி செய்த செயல், வீட்டைவிட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா... யூடியூப் டிரெண்டிங்கில் பாக்கியலட்சுமி புரொமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan
