ஏழுமாத சட்ட போராட்டம் வென்றது, பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் குரல் கொடுப்போம்: சட்டத்தரணி சுகாஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட 10 பேரும் இன்றையதினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது என மன்றுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது பக்க நியாயங்களைத் தெரியப்படுத்தினோம். ஏழு மாத காலமாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகச் சட்டப் போராட்டம் நடத்தினோம்.
எமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்த மன்று அவர்களைப் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.
நமது சட்ட போராட்டத்திற்கு எம்மோடு கைகோர்த்த சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல், ஜெசிங்கம், மற்றும் நமது முஸ்லிம் சகோதர இனத்தைச் சேர்ந்த ரம்சி மற்றும் றிப்கான் ஆகியோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே பாதிக்கப்பட்ட தமிழன் எங்கிருந்தாலும் அவர்களுக்காக நீதி கிடைக்கத்
தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri