ஆரம்பமாகியது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்! - செய்திகளின் தொகுப்பு (Video)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
கூட்டத்தொடரின் இன்றைய முதல் நாளில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 461 பிரேரணை செயற்படுத்தப்படும் விதம், மனித உரிமைகள் விடயங்கள் என்பன குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டவுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,