குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவில் தடுப்பூசி செலுத்துவதற்காக நடமாடும் சேவை ஆரம்பம்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவில் தடுப்பூசி செலுத்துவதற்காக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.ஏ. அஜித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
30 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடையவர்களும் மற்றும் இத்தா மார்க்கக் கடமையை அனுஷ்டிக்கும் தாய்மார்களும் நடமாடும் சேவை மூலம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, இவர்கள் பெயர், முகவரி அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் மூலமா அல்லது குறுந்தகவல் மூலமோ தங்களுடைய விபரங்களை அனுப்பி வைத்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
0771210302, 0776789328, 0779312196





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
