பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!
நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இச்சேவை நீடிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.

இதற்கமைய நல்ல உடல் தகுதியுடனும், நன்நடத்தையுடனும், களங்கமற்ற சேவையாற்றி 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் இந்த சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மிக விரைவில் இந்த சேவை நீடிப்புகள் வழங்கப்படவுள்ளன. பொலிஸ் திணைக்களத்தில் பெருமளவிலான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஒரே தடவையில் அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினம் என்பதாலும், அதற்கு தற்காலிக தீர்வாகவே இந்த சேவை நீடிப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் 84,000 அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய போதிலும், தற்போது 50,000க்கும் குறைவான அதிகாரிகளே கடமையாற்றி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசூலில் பட்டய கிளப்பும் Spider-Man: Brand New Day திரைப்படம்... 4 நாட்களில் இத்தனை கோடியா? Cineulagam
பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு News Lankasri