ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு கப்பல்
முன்பு "வெள்ளை யானை" என்ற அழைக்கப்பட்ட சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், 2024 இல் பயணக் கப்பலின் 10 வது வருகையைப் பதிவு செய்துள்ளது.
'Serenade of the Seas’ என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 29 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு தனது முதல் வருகையை மேற்கொண்டது.
1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்த சொகுசுக்கப்பல், 2024 ஆம் ஆண்டில் குறித்த துறைமுகத்துக்கு பயணித்த 10 வது பயணிகள் கப்பல் ஆகும்.
இந்தநிலையில் குறித்த கப்பல் அடுத்து கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |