தமிழ் தலைமைகள் மக்களுக்கு செய்தது என்ன..! கனடா உயர்ஸ்தானிகரை வியக்க வைத்த ஈழத்தமிழன்
தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு எந்தவொரு தமிழ் தலைமையும் முன்வரவில்லை என கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான செந்தில் குமரன் (மின்னல் செந்தில்) குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.
அரசாங்கத்தில் இடம்பெறும் விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு, அதன் பின்னர் தங்களது முடிவுகளை எடுப்பது சிறந்தது. ஏனெனில், இலங்கையில் வாழும் எமது தாய் உறவுகளுக்கு பல்வேறு விதமான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பது அவசியம்.
இதுவரையில் 200க்கும் மேற்பட்டோருக்கு நான் வழங்கியுள்ள மருத்துவ உதவிகள் அவர்களது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
இதேவேளை, இலங்கையில் வாழும் மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.
ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்