அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), அதன் விமானப்படை, கடற்படை மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான குட்ஸ் படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இன்று இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள பாகிஸ்தானில் உள்ள முக்கியமான விமானத் தளமான நூர் கான் தளத்தை வந்தடைந்துள்ளனர்.
வளைகுடாப் பகுதி வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN வெளியிட்ட தகவலின்படி, இந்த வருகை ஈரானிய தூதுக்குழுவிற்கு ஆதரவு மற்றும் தளவாட உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.
15 மணி நேரங்களை கடந்தும் பாகிஸ்தானில் தொடரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை! எதிர்ப்பார்ப்பில் மத்திய கிழக்கு
திடீர் வருகை
மேலும், வந்துள்ள மூத்த IRGC அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் பயணக் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட Pouya Air நிறுவனத்திற்குச் சொந்தமான குறைந்தது ஒரு விமானம் அந்தத் தளத்தில் தரையிறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த விமானம் தரையிறங்கிய நூர் கான் தளம், பாகிஸ்தானுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தளத்திற்கு அனுமதி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் வருகை பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகளில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri